தீபாவளிக்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு 'வாவ்' அறிவிப்பு
சென்னை: தீபாவளிக்கு முந்தைய நாள், அதாவது அக்டோபர் 26 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வரும் 27 ஆம் தேதி நாடு முழுக்க தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரப் பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியைக் கொண்டாட செல்லும் மக்கள் ஏராளமானோர் உள்ளனர்.
இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி பண்டிகை வருவதால், வெள்ளிக்கிழமையே சொந்த ஊருக்கு கிளம்பி செல்வதற்காக மக்கள் விருப்ப படுவார்கள். ஆனால், பள்ளி கால அட்டவணைப்படி முந்தைய நாளான சனிக்கிழமை வேலை நாட்களாக இருந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு இன்று ஒரு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அக்டோபர் 26 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் பள்ளி செல்வது பாதிக்கப்படாமல் ஒரு நாள் முன்பாகவே குழந்தைகளை கூட்டிக்கொண்டு பெற்றோர்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியை சிறப்பாக கொண்டாட முடியும்.