கொரோனா பரவலை தடுக்க அதிரடி.. தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளுக்கும் சீல்
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் நாளை மாலை 6 மணி முதல் வரும் 31-ஆம் தேதி வரை மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மத்திய - மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் 3-ஆவது நிலையை அடையக் கூடாது என்பதற்காக இந்தியா பல்வேறு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடித்து வருகிறது.
ஊரடங்கு உத்தரவு
இந்த நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க மார்ச் 22ஆம் தேதி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். தமிழகத்தில் இன்று காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. நேற்றைய தினமே கொரோனா பாதித்த மாவட்டங்களான சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை லாக் டவுன் செய்ய அறிவிக்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு
இந்த நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க மார்ச் 22ஆம் தேதி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். தமிழகத்தில் இன்று காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. நேற்றைய தினமே கொரோனா பாதித்த மாவட்டங்களான சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை லாக் டவுன் செய்ய அறிவிக்கப்பட்டது.
எல்லைகள் மூடல்
ஆயினும் ஏதோ ஒரு காரணத்தினால் அவை நிறுத்தப்பட்டது. பின்னர் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு ஆகிய மாவட்ட எல்லைகளை மூட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஆலோசனை செய்தது. அப்போது கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து மாவட்டங்களின் எல்லைகளை நாளை மாலை 6 மணி முதல் வரும் 31-ஆம் தேதி வரை மூடப்படும்.
எல்லைகள் மூடல்
ஆயினும் ஏதோ ஒரு காரணத்தினால் அவை நிறுத்தப்பட்டது. பின்னர் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு ஆகிய மாவட்ட எல்லைகளை மூட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஆலோசனை செய்தது. அப்போது கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து மாவட்டங்களின் எல்லைகளை நாளை மாலை 6 மணி முதல் வரும் 31-ஆம் தேதி வரை மூடப்படும்.
அத்தியாவசியம்
இதையடுத்து தமிழகம் முழுவதும் 144 தடையுத்தரவும் போடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்து இயக்கப்பட மாட்டாது. அத்தியாவசிய வாகனங்கள் மட்டும் இயக்கப்படும். மளிகைக் கடை, காய்கறிக் கடை, இறைச்சிக் கடை, பால் கடை, மருந்து கடை ஆகியவை மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியம்
இதையடுத்து தமிழகம் முழுவதும் 144 தடையுத்தரவும் போடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்து இயக்கப்பட மாட்டாது. அத்தியாவசிய வாகனங்கள் மட்டும் இயக்கப்படும். மளிகைக் கடை, காய்கறிக் கடை, இறைச்சிக் கடை, பால் கடை, மருந்து கடை ஆகியவை மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அரசு அலுவலகங்கள்
ஆட்டோக்கள், கார்கள் ஆகியவையும் இயங்காது. காவல்துறை, நீதித் துறை, மருத்துவத் துறை, மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத் துறை ஆகிய அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கும். ஏனைய துறைகள் ஏதும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் குறைந்த அளவிலான ஊழியர்களை கொண்டு இயக்கிக் கொள்ளலாம். பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு அறிவிப்பை இன்று மாலை முதல்வர் வெளியிடுவார்.
ஏனைய அரசு அலுவலகங்கள்
ஆட்டோக்கள், கார்கள் ஆகியவையும் இயங்காது. காவல்துறை, நீதித் துறை, மருத்துவத் துறை, மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத் துறை ஆகிய அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கும். ஏனைய துறைகள் ஏதும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் குறைந்த அளவிலான ஊழியர்களை கொண்டு இயக்கிக் கொள்ளலாம். பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு அறிவிப்பை இன்று மாலை முதல்வர் வெளியிடுவார்.