தமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் வரும் மார்ச் 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாகக் கடந்தாண்டு மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல் 40 நாட்கள் எவ்வித தளர்வுகளுமின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
அதன் பின்னர், ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும்கூட, மாதம்தோறும் ஊரடங்கு என்பது தொடர்ந்து நீட்டிக்கப்படு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், ஊரடங்கு மேலும் ஒரு மாதம், அதாவது மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
நாளை இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி.. வயது 45 தாண்டிவிட்டதா? அப்போ முதல்ல இதைப் படிங்க
மருத்துவ வல்லுநர் குழு மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலுள்ள அனைத்து முக்கிய கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.