ஏழைகளுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்.. தமிழக அரசு அறிவிப்பு.. பணம் போச்சே
Recommended Video
சென்னை: ஏழைகளுக்கு 2000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கஜா புயல் பாதிப்பு, மழையின்மை போன்ற காரணங்களால் தமிழகத்தில் உள்ள ஏழை எளியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் சிறப்பு நிதி, திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்த நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ளவர்கள் குறித்து உரிய முறையில் சர்வே நடத்தாமல் 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துவதாகவும், சர்வே முடியும் வரை நிதி ஒதுக்க கூடாது என்றும், விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று தனது பதிலை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 2000 ரூபாய் வழங்கும் திட்டம் மற்றும் பயனாளிகளை அடையாளம் காணும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்பிக்கு பார்த்த பொண்ணு அண்ணன்கிட்ட லவ்வை சொல்றா... என்னாங்கடா இது... தலை சுத்துது!
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இவ்வாறு தாங்கள் நிறுத்தி வைத்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் மனுதாரர் தாக்கல் செய்தது வரைவு அரசாணை என்றும், அரசு தாக்கல் செய்துள்ளது தான் அசல் அரசாணை என்பதும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, லோக்சபா தேர்தலுக்குப் பிறகு வழக்கை விசாரிப்பதாக, உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் சில பலனாளிகள் பணம் பெற்றுவிட்ட நிலையில், பலருக்கும் இன்னும் அரசு நிதி கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ அதைப் பொறுத்துதான், தமிழக அரசு இந்த திட்டத்தை நீட்டிக்கும் வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எனவே, பணம் கிடைக்காத பலனாளிகள் பதற்றத்தில் உள்ளனர்.