ஜூன் மாதமும் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணை.. எடப்பாடியார் அதிரடி
சென்னை: அரிசி அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதமும் அரிசி, பருப்பு. எண்ணை போன்றவை விலையில்லாமல் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
நியாய விலைக்கடைகளில் ஏப்ரல், மே மாதங்களில், அரிசி அட்டைதாரர்களுக்கு, அரிசி, பருப்பு, எண்ணை, சர்க்கரை போன்றவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார்.
தொலைக்காட்சியில் தோன்றி இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றியபோது, இந்த தகவலை எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். எனவே, ரேஷன்கார்டுதாரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், ரேஷன் கடைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை மக்கள் எதிர்பார்த்தனர். அது வெளியாகவில்லை.
வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ20 லட்சம் தமிழக அரசு நிதி உதவி
வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல இரவு 10மணிக்கு மேல் ரயில் இயக்கப்படும், ஒரு வார காலத்திற்குள் விரும்புகிறவர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எடப்பாடியார் பேசினார். பகலில் தொழிலாளர்களை அழைத்துச் சென்றால் டிராபிக் நெரிசல் ஏற்படும் என்பதால் இந்த நடவடிக்கை என எடப்பாடியார் தெரிவித்தார்.