தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்: 14 மாவட்ட கவுன்சில்களில் திமுக; அதிமுகவுக்கு 13
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் திமுக மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகிய இரண்டு பதவிகளுக்குமான தேர்தலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும்தான் தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை முழுமையான முடிவுகள் தெரிய வரும்.
தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக காலியாக இருந்த ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 91,975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் 2.30 லட்சம் வாக்காளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ஆகிய இரண்டு முக்கிய பதவிகளிலும் திமுக கட்சிதான் முன்னிலை வகித்து வருகிறது.