ஆளும் கட்சி மீது மக்கள் பெரும் வெறுப்பில் உள்ளனர்.. எல்லோருக்கும் மிக்க நன்றி.. ஸ்டாலின் நெகிழ்ச்சி
ஆளும் கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஆளும் கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது, மக்களுக்கு மிக்க நன்றி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் முடிவுக்குள் வெளிவர தொடங்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிபெற்று விட்டது. தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் 14-ல் திமுக; 13-ல் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 5090 இடங்களில் திமுக 2330, அதிமுக 2165, மற்றவை - 509 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இன்னொரு பக்கம் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 515 இடங்களில் திமுக 263, அதிமுக 240, மற்றவை - 1 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இரண்டிலும் திமுக 50%+ இடங்களை வென்றுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மாஸ்.... 39 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றிய பாமக
ஸ்டாலின் என்ன சொன்னார்
ஸ்டாலின் தனது அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்றுள்ள மகத்தான வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. எத்தகைய அராஜகத்தையும், அடாவடிகளையும் மீறி வெற்றி பெறும் வல்லமை மக்கள் சக்திக்கு உண்டு. மக்கள் தங்களின் சக்தியை நிரூபித்து விட்டார்கள்.
தமிழக வாக்காளர்கள்
தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. ஆளும் கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இதன் மூலம் தெரிய வந்துள்ளது.ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
மாநில தேர்தல் ஆணையம்
இந்த தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் மிகவும் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டது.ஆனால் அதையும் மீறி திமுக கூட்டணி வென்றுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியின் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறைகளை மீறி தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
மகனும் தோல்வி.. மகளும் படுதோல்வி... பெரும் விரக்தியில் அன்வர் ராஜா.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான்!
அதிமுக அரசு
அதிமுக அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை வளைக்க நினைத்தது.நிறைய எதிர்மறையான விஷயங்களை அதிமுக அரசு செய்தது. ஆனால் மக்கள் அவர்களை மதிக்கவில்லை. பெரும்பான்மை வெற்றியை திமுக கூட்டணிக்கு கொடுத்திருக்கும் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி, என்று கூறியுள்ளார்.