தீபாவளியன்று வங்ககடலில் காற்றழுத்த தாழ்வுநிலை.. கனமழைக்கு வாய்ப்பு
தீபாவளியன்று வங்ககடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் , அதனால் கனமழைக்கு வாய்ப்பு ஏற்படும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: தீபாவளியன்று வங்ககடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் , அதனால் கனமழைக்கு வாய்ப்பு ஏற்படும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த அக்டோபர் 1ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பல நாட்கள் காலம் தாழ்ந்து தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது.
இதனால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக டெல்டா பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது.
இதன் நிலையில் தீபாவளியன்று வங்ககடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் கனமழைக்கு வாய்ப்பு ஏற்படும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
[தென்தமிழகத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை.. இன்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு!]
ஆனால் இது புயல் சின்னமாக மாறுமா என்று கணிக்க முடியவில்லை என்று வானிலை ஆய்வ மையம் கூறியுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தீபாவளியன்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது, கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றுள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு