தமிழக பிளஸ் டூ தேர்வு முடிவுகள்.. அசத்தலாக படித்த சிறைக் கைதிகள்.. 50 பேர் தேர்ச்சி
சென்னை: பிளஸ் டூ தேர்வு எழுதிய சிறை கைதிகள் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. திருப்பூர் மாவட்டம் முதலிடமும், இரண்டாவது இடம் ஈரோடு மாவட்டமும் பெற்றுள்ளது. கடந்த வருடமும் இதே போன்ற இடங்களை இம்மாவட்டங்கள் பிடித்து அசத்தின. மறுபடியும் சாதித்துள்ளன.
கடலூர் மாவட்டம் 77.74 சதவீதத்துடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது. தமிழகம் முழுக்க, 2120 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி.. இந்த வருடமும் மாணவிகளே அசத்தல் தேர்ச்சி!
அரசு பள்ளிகள் 85.94 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது வரவேற்கத் தக்க அம்சமாக உள்ளது. சிறைக் கைதிகள் 62 பேர் பிளஸ் டூ தேர்வு எழுதிய நிலையில், அவர்களில் 50 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை 9.30 மணி முதல் இணையதளத்தில் பார்க்கலாம். http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை பார்க்கலாம்.