உஷாரய்யா, உஷாரு.. தமிழக போலீசுக்கு 10,000 புது லத்திகள் வாங்க முடிவு!
சென்னை: தமிழக போலீசாருக்கு, ரூ.17 லட்சம் செலவில் 10,326 லத்திகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரிடம் தவறாமல் இடம் பெற்றிருக்கும் இரு அம்சங்கள், லத்தியும், விசிலும்தான். விசில் ஊதுவது எச்சரிக்கைகாகவும், எல்லை மீறும்போது அடிக்க லத்தியும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழக காவல்துறையினர் பயன்படுத்தும், லத்திகளும், விசில்களும் பழையதாகிவிட்ட நிலையில், காவல்துறையை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் சட்டம், ஒழுங்கு பிரிவு காவல்துறையினருக்கு, புதிதாக லத்திகள், விசில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம், 10 ஆயிரம் லத்திகள், 26 ஆயிரம் விசில்கள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு லத்திக்கான விலை எவ்வளவு தெரியுமா? ஒரு லத்தி விலை ரூ.165 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.17 லட்சம் செலவில் 10 ஆயிரத்து 326 லத்திகள் வாங்கப்படுகிறது. 26 ஆயிரத்து 196 விசில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு ரூ.13 லட்சம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
2 நாட்கள் அமைதிக்கு பிறகு இலங்கையில் மீண்டும் இன்று குண்டு சத்தம்! தியேட்டர் அருகே பரபரப்பு
ஜூலை மாதம் முதல் புதிய லத்திகளும், விசில்களும் வழங்கப்பட உள்ளன. எனவே, விஷமிகளே, ஜாக்கிரதை. நீங்கள் பொதுமக்களுக்கு ஏதாவது தொல்லை கொடுத்தால், புதிய லத்திக்கள் உங்களை பதம் பார்க்க கூடும்.