Breaking News: கூட்டணி ஓவர்.. தனக்கு 20.. கூட்டணிக் கட்சிகளுக்கு 20 ஒதுக்கியது திமுக!
சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில், அரசியல் களம் இன்று மீண்டும் சூடுபிடித்துள்ளது.
ஒருபக்கம் விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் தீவிர ஆலோசனை நடத்திய நிலையில், மற்றொரு பக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுக இடையே தொகுதி உடன்படிக்கை கையெழுத்தானது.
இதன்பிறகு, திமுக, மதிமுக நடுவே கூட்டணி உடன்படிக்கை கையெழுத்தானது. இன்னும் பல அரசியல் பரபரப்பு செய்திகள் வந்த வண்ணம்தான் இருக்கப்போகின்றன. இது தொடர்பாக, உடனுக்குடன் நீங்கள் அறிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்து இருங்கள்.
மார்ச் 9ம் தேதி கூட்டம் நடைபெறும் - ஜவாஹிருல்லா தகவல்
கூட்டத்தில் எங்களது நிலைப்பாட்டை விரிவாக விவாதித்து எடுப்போம் - ஜவாஹிருல்லா
திமுகவிடம் சொந்த சின்னத்தில் போட்டியிட ஒரு இடம் கேட்டிருந்தோம் - ஜவாஹிருல்லா
தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.. இறுதியில் இடமில்லை என்று தெரிவித்தார்கள் - ஜவாஹிருல்லா
எதிர்காலத்தில் வாய்ப்புகள் தருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார் - ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் சீட் தரப்படவில்லை
திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது
கூட்டணிக் கட்சிகளுக்கு புதுவையையும் சேர்த்து 20 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக கூட்டணி இட ஒதுக்கீடு - காங்கிரஸ் 10, விசிக 2, சிபிஎம் 2, சிபிஐ 2
மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசியக் கழகம், ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலா 1
DMK President MK Stalin: We have allocated 10 seats to our alliance partner Congress & other 10 have been given to our other alliance partners. DMK will contest on the remaining 20 seats.On 7th March, we will begin the identification of the seats for both DMK & alliance partners. pic.twitter.com/bZTiHMBEWR
— ANI (@ANI) March 5, 2019