தமிழகத்தில் இன்று 455 பேருக்கு கொரோனா பாதிப்பு; 477 பேர் டிஸ்சார்ஜ்- 6 பேர் மரணம்
சென்னை: தமிழகத்தில் இன்று 455 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதேநேரத்தில் 477 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இன்று கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் இன்று 50,193 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 455 பேருக்கு கொரோனா உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 1,64,99,151 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,45,575 ஆகும்.
புதுச்சேரி: 'அதிரடி' மல்லாடி கிருஷ்ணாராவ் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்!
கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் இன்று மருத்துவமனைகளில் இருந்து 477 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 8,28,918.
கொரோனாவால் இன்று 6 பேர் பலியாகினர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 12,425 பேர் மரணம் அடைந்துள்ளனர். சென்னையில் 143 பேருக்கும் கோவையில் 46; செங்கல்பட்டில் 39 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது. சென்னையில் அதிகபட்சமாக 2 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்தனர்.