தமிழகத்தில் இன்று 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி-2 பேர் மரணம்
சென்னை: தமிழகத்தில் இன்று 586 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு இன்று தமிழகத்தில் 2 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,41,547 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 1,53,242 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இந்தியாவில் 5-வது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை தமிழகத்தில் 1,52,67,910 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
புதியதாக பாதிப்பு
தமிழத்தில் இன்று மட்டும் மொத்தம் 586 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் இன்று 673 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக ஆக்டிவ் கேஸ்கள்
தமிழகத்தில் தற்போது 4,984 பேருக்கு கொரோனா சிகிச்சை (ஆக்டிவ் கேஸ்கள்) அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,34,171 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 8,16,878 ஆகும்.
மொத்த மரணங்கள்
தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 12,309. இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 26 பேருக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள்து.
சென்னை நிலவரம்
சென்னையில் இன்று 153 பேருக்கும் செங்கல்பட்டில் 51, கோவையில் 47 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4085 ஆகும். சென்னைக்கு அடுத்ததாக செங்கல்பட்டில் 762 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.