தமிழக உள்ளாட்சித் தேர்தல் Live: 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு நிறைவு
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் அமைப்புகளுக்கான தேர்தலில் 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
தமிழகத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 27-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
27 மாவட்டங்களில் 46, 639 பதவிகளுக்கு தேர்தல் இன்று 2-ஆம் கட்டமாக நடைபெற்றது. 158 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
வரிசையில் நிற்போருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே டோக்கன் வைத்துள்ளோர் மட்டுமே 5 மணிக்கு மேல் வாக்களிப்பர். பகல் 3 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
Newest First Oldest First
Comments
English summary
Second and last phase of the Tamilnadu local body elections are being conducted today.