சத்யபிரதா சாஹு தடுமாற்றம்.. உடனே தேவை சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி.. ஸ்டாலின் அதிரடி கோரிக்கை
சென்னை: கோவையில் இருந்து 50 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று இரவு தேனி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் பாதுகாக்க சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதில் தமிழகத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெறுகின்றன.
வாக்குப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் பாதுகாக்க மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும். ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது கண்டனத்துக்கு உரியது.
தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையிழந்து விட்டன. தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது கவலை அளிக்கிறது.
சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கு தலைமைத் தேர்தல் அதிகாரி தடுமாறுகிறார். அவரது பேட்டி புதிய பிரச்சினைகளைத்தான் உருவாக்கியுள்ளது. 46 ஓட்டு சாவடிகளில் தவறு நடந்துள்ளதாகவும், மறு வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சத்யபிரதா சாஹு கூறியுள்ளார். அங்கு நடந்த தவறுகள் என்ன என்பது பற்றிய விவரங்களையும், மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரைத்த விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.
மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடையால் 5பேர் பலி.. எடப்பாடிக்கு ஸ்டாலின் முக்கிய கோரிக்கை
வாக்குப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் பாதுகாக்க சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் சம்பந்தமே இல்லாதது போல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது கவலை அளிக்கிறது. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ தடுமாறுகிறார். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.