"சென்னையை சுற்றி குழுமியிருக்கும் தரமான சிகப்பு தக்காளிகள்.. சின்ன சின்ன மழைத்துளிகள் செம செம"
சென்னை: சென்னையை சுற்றி சிகப்பு தக்காளிகள் குழுமியிருப்பதால் நல்ல மழை பெய்து வருகிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் மாலை நேரத்தில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
இது போல் நேற்று முன் தினமும் கனமழை பெய்தது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் சின்னஞ்சிறிய மழையாக இருந்தாலும் பின்னி பெடலெடுக்க போகுது. சென்னையின் வடமேற்கு பகுதியில் வானம் மேகமூட்டமாக இருந்தது.
Red Thakkalis of very high quality lashing all parts of Chennai. Semma semma semma. Just enjoying the spell. pic.twitter.com/8T30YRpc59
— TamilNadu Weatherman (@praddy06) August 30, 2019
சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களை சுற்றிலும் நல்ல தரமான சிகப்பு தக்காளிகள் சூழ்ந்துள்ளன. இவை செம செம செம மழையை கொடுக்கும். மழையை ரசியுங்கள் என்றார்.