சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மே மாத இறுதியில் அரபிக் கடலில் சுவாரசிய மாற்றங்கள் இருக்கும்.. வெதர்மேன் கணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: மே மாத இறுதியில் அரபிக் கடலில் சுவாரஸ்யமான மாற்றங்கள் ஏற்படும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    மாத இறுதியில் அரபிக் கடலில் சுவாரசிய மாற்றங்கள் இருக்கும் - Tamilnadu weatherman | Oneindia Tamil

    கடந்த 2 அல்லது 3 நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் அதிகமாக தகிக்கிறது. சென்னையில் வெப்பநிலை 107 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. திருத்தணியில் 110 டிகிரி பாரன்ஹீட் வரை உயர்ந்தது.

    இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவியுள்ளது. தமிழகத்தில் மேலும் இரு தினங்களுக்கு அனல்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்னும் 2 மாதங்கள்தான்.. சர்வதேச விமான போக்குவரத்தை துவங்க போகிறோம்- மத்திய அமைச்சர்இன்னும் 2 மாதங்கள்தான்.. சர்வதேச விமான போக்குவரத்தை துவங்க போகிறோம்- மத்திய அமைச்சர்

    சென்னையில் வெப்பம்

    சென்னையில் வெப்பம்

    இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் கடல் காற்று வந்துவிட்டது. எனவே எதிர்பார்த்தப்படி இன்று முதல் சென்னையில் வெப்பநிலை குறையும். இனி சென்னையில் 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் பதிவாகாது.

    கடலில் மாற்றங்கள்

    கடலில் மாற்றங்கள்

    கடந்த 19-ஆம் தேதி தேதிக்கு முன்னர் சென்னையில் எப்படி இருந்ததோ அந்த அளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்பும். வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் மேற்கு பகுதியில் உள்ள இடங்களில் வெப்பம் தொடரும். மாத இறுதியில் அரபிக் கடலில் சில சுவாரஸ்மான மாற்றங்கள் ஏற்படுவது போல் தெரிகிறது என்றார் பிரதீப் ஜான்.

    ஏமாற்றம்

    ஏமாற்றம்

    கத்திரி வெயில் தமிழகத்தில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. வேலை செல்வோர் ஜூஸ் கடைகள், கரும்பு ஜூஸ் கடைகள் இல்லாது வெயிலில் அவதிப்படுகிறார்கள். நேற்று மாலை வானம் மூடியது போல் மூடி ஏமாற்றத்தை தந்துவிட்டது.

    சுட்டெரிக்கும் வெயில்

    சுட்டெரிக்கும் வெயில்

    ஆம்பன் புயல் கடந்த புதன்கிழமை மேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே கரையை கடந்தது. இந்த புயல் சென்னையிலிருந்து 950 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்த போது லேசான மழை பெய்து பூமியை குளிர வைத்தது.

    English summary
    Tamilnadu Weatherman Pradeep John says that temperature drops in Chennai from May 23rd that is from today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X