ஆஹா பார்க்கிறதுக்கே ஆசையா இருக்கே.. இது மட்டும் நடந்தால் சென்னையில் மழை வச்சு செய்யும்- வெதர்மேன்
Recommended Video
சென்னை: இன்னும் கொஞ்சம் நாளில் தமிழகம் மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை வச்சு செய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இன்னும் அந்தளவுக்கு மழை பெய்யவில்லை. உருவான 3 புயல்களில் இரு புயல்கள் அரபிக் கடலிலும் ஒரு புயல் வங்கக் கடலில் உருவாகி வடக்கு நோக்கியும் சென்றுவிட்டது.
இதனால் இன்னும் கொஞ்ச நாட்களில் வடகிழக்கு பருவமழையே முடியும் நிலையில் உள்ளது. ஆனால் மழை பெய்தபாடில்லை. இதனால் வரும் கோடையிலும் வறட்சி நிலவும் என அச்சம் இப்போதே மக்களிடம் தொற்றி கொண்டது.
ஆமா இப்ப எதுக்கு இந்த "நிஷாவ" பத்தி வெதர்மேன் பேசணும்? அப்படின்னா அதுதான் நடக்குமோ?
கிராஃப்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் ஒரு வாரம் போய்விட்டது. எனினும் ரேடாரில் இது போன்ற கிராஃப்களை பார்ப்பதற்கு சற்று ஆசையாக இருக்கிறது.
சந்தேகம் இல்லை
இது போல் நடந்தால் மிகவும் நன்றாக இருக்கும். ஏராளமான மேகக் கூட்டங்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் நிறைய வருகின்றன. இது போல் நடந்தால் மழை வெச்சு செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழ்நாடு வெதர்மேன்
இன்னும் கொஞ்சம் நாட்களில் சென்னை மட்டுமில்லாது தமிழக கடலோர பகுதிகளில் மழை வெளுத்து வாங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது போல் இன்றைய தினம் நிஷா புயல் பற்றிய நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.
நிஷா புயல்
அதில் இது போல்தான் கடந்த 2008-இல் நவம்பர் மாதம் முழுவதும் மழையே இல்லாமல் இருந்தது. ஆனால் நிஷா புயலால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என நினைவுகளை கூறியுள்ளார். அப்படியென்றால் மீண்டும் ஒரு நிஷா வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.