உலக கோப்பை அரையிறுதி போட்டி இன்று நடைபெறுமா?.. என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்!
Recommended Video
சென்னை: உலக கோப்பை அரையிறுதி போட்டி இன்று நடைபெறுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
கடந்த மே மாதம் இறுதியில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இதில் அரையிறுதி போட்டிக்கு இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இதில் இந்தியா, நியூஸிலாந்து போட்டி நேற்று நடைபெற்றது.
அப்போது நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே நின்று போனது. இதனால் இந்த போட்டி இன்றும் தொடர்கிறது.
இறுதி போட்டி
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே இறுதி போட்டிக்கு தகுதி பெறும். அது போல் இந்த அணியுடன் நாளை நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளில் எது வெற்றி பெறுகிறோ அந்த அணியே இறுதிப் போட்டியில் மோதும்.
ரசிகர்கள்
இந்த நிலையில் இந்தியா உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பாகும். இந்தியா இறுதி போட்டிக்கு செல்வதை காண நேற்றைய தினம் ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.
மகிழ்ச்சி
இன்று மீண்டும் தொடரவுள்ள போட்டியின் போது மழை குறுக்கிடக் கூடாது என ரசிகர்கள் விரும்புகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் சற்று மகிழ்ச்சி அளிக்கும் செய்தியை கூறியுள்ளார்.
மகிழ்ச்சியாக இருங்கள்
அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில் அரையிறுதி போட்டி நடைபெறும் லண்டன் மைதானத்தில் இன்று மழை பெய்யாது. எனவே மழை குறுக்கிடும் என்ற அச்சம் ரசிகர்களுக்கு வேண்டாம். மொத்தம் 50 ஓவர்கள் மேட்ச்சும் முழுவதுமாக நடைபெறும். மகிழ்ச்சியாக இருங்கள் என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.