சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்றும் நாளையும் தமிழகத்தில் செம மழை இருக்கு.. எங்கெல்லாம் பெய்யும் தெரியுமா? வானிலை மையம் கணிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Tamilnadu Weather Update : இன்றும் நாளையும் தமிழகத்தில் செம மழை இருக்கு..

    தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தீவிரமாக மழை பெய்து வருகிறது.

    கடந்த ஒரு வாரமாக கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் தீவிரமாக மழை பெய்வதால், காவிரியில் நீர் வரத்தும் அதிகரித்து உள்ளது.

     நேரு காலத்தில் இருந்தே.. முதுகில் குத்துவது முழுநேர வேலை.. மாமல்லபுரம் நட்பை கேலிக்கூத்தாக்கிய சீனா நேரு காலத்தில் இருந்தே.. முதுகில் குத்துவது முழுநேர வேலை.. மாமல்லபுரம் நட்பை கேலிக்கூத்தாக்கிய சீனா

    அடுத்த இரண்டு நாட்கள்

    அடுத்த இரண்டு நாட்கள்

    இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, சேலம், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கடலோர மாவட்டங்கள்

    கடலோர மாவட்டங்கள்

    அதேபோல் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலில் காற்று தீவிரமாக வீசும். பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை நிலைமை

    சென்னை நிலைமை

    ஆனால் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் நாள் முழுக்க வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை நேரத்தில் லேசான சாரல் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நன்றாக காற்று வீசும். பெரிய அளவில் மழையை எதிர்பார்க்க முடியாது.

    டெல்டா மாவட்டங்கள்

    டெல்டா மாவட்டங்கள்

    தமிழகத்தில் இன்னும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை. இன்னும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. டெல்டா மாவட்டங்களுக்கு காவிரியில் நீர் வரத்து அதிகரிக்கும். வரும் நாட்களில் அங்கு மழை பெய்ய தொடங்கும். இந்த மாத இறுதியில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கும்.

    English summary
    Tamilnadu will see moderate rain for the next two days in some districts
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X