தீவிரம் அடையும் தென் மேற்கு பருவமழை.. தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக மழை பெய்து வருகிறது. முக்கியமாக கேரளா மற்றும் கர்நாடகாவில் தீவிரமாக கனமழை பெய்ய தொடங்கி உள்ளது.
கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கி அங்கு தினமும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
24 மணி நேரத்தில் 11,000+ கொரோனா கேஸ்கள்.. 321 மரணங்கள்.. இந்தியாவில் மிக மோசமாகும் நிலைமை!
இன்று மழை
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவை ஒட்டி இருக்கும் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை அருகே இருக்கும் மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யும். இன்று மொத்தம் 5 மாவட்டங்களில் தீவிரமாக மழை பெய்யும்.
எங்கு பெய்யும்
அதன்படி கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். கொங்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் லேசான சாரல் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரிய அளவில் மழை இருக்காது.
சென்னை நிலைமை
சென்னையை பொறுத்தவரை இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எப்போதும் போல மாலை நேரத்திற்கு பின் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னைக்காயல் வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியஸில் இருந்து 38 டிகிரி செல்சியஸ் ஆக குறையும். மேக மூட்டத்தை பொறுத்து 29 டிகிரி செல்சியஸ் ஆக குறையவும் வாய்ப்பு உள்ளது.
கடல் எப்படி
தென்மேற்கு பருவமழை காரணமாக இந்திய பெருங்கடல் கொந்தளிப்பாக காணப்படும். அதேபோல் அரபிக்கடலிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி மக்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அங்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும், அதிக காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.