கலக்கும் தமிழச்சி.. "ம்மா.. என்கிட்ட சொன்னதை அப்படியே இவங்க கிட்ட சொல்லுங்க"!
தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சாரம் செய்தார்.
Recommended Video
சென்னை: "கேட்டுக்கங்க.. ம்மா.. நீங்க என்கிட்ட சொன்னதை இவங்க கிட்ட சொல்லுங்க.." என்று தென் சென்னை பிரச்சாரத்தில் பட்டையை கிளப்பி கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார் தமிழச்சி தங்கபாண்டியன்!
தென்சென்னை தொகுதியில் இரு பெரும் வாரிசுகள், இரு பெரும் கட்சியில் களமிறக்கப்பட்டுள்ளனர். ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை. ஆளுக்கொரு புறம் பிரச்சாரம் செய்து தென்சென்னையை ரவுண்டு கட்டி வருகின்றனர்.
இதில் தமிழச்சி தங்கபாண்டியன், சந்து பொந்து ஒன்றுவிடவில்லை.. எல்லாவற்றிற்குள்ளும் நுழைந்து அங்கிருந்த மக்களிடம் வாக்கு கேட்டார். சில சந்துகளில் நடக்கக்கூடிய வழியில்லை.. அப்படியும் உள்ளே புகுந்து வீடுதோறும் ஓட்டு கேட்டார்.
பஸ் ஸ்டாண்டு
பிறகு மெயின்ரோடுக்கு வந்தார். வழியில் சென்று கொண்டிருந்த ஒவ்வொருவரிடமும் கையில் இருந்த நோட்டீசை தந்தார். அப்படியே நடந்து பஸ் ஸ்டேண்ட் பக்கம் வந்தார். அங்கே ஒன்றிரண்டு பேர் பஸ்ஸுக்காக காத்திருந்தனர்.
கையை பிடித்தார்
அவர்களிடம் தந்துவிட்டு திரும்பும்போது, ஒரு பெண்மணி அப்போதுதான் பஸ் ஸ்டேண்ட் வந்து நின்றார். தமிழச்சியை பார்த்ததும் அவருக்கு முகத்தில் ஒரே பூரிப்பு.. தமிழச்சி நோட்டீசை அங்கே நீட்ட.. அந்த பெண்ணோ, தமிழச்சியின் கையை கெட்டியாக பிடித்து கொண்டார்.
இப்ப சொல்லுங்க
அவரிடம் ஏதோ சொன்னார். உடனே காமிரா, செய்தியாளர்கள் பக்கம் திரும்பிய தமிழச்சி அனைவரையும் தன்னருகே அழைத்தார். தமிழச்சியிடம் மைக்கை நீட்டியபோது, "ம்மா.. என்கிட்ட என்ன சொன்னீங்களே அதை இவங்க கிட்ட சொல்லுங்க" என்கிறார்.
கேட்டீங்க இல்லை?
அந்த பெண்மணியும்,"நான் பக்கா அதிமுக.. ஆனாலும் எனக்கு அதிமுக புடிக்கல.. அதனால திமுகவில சேரப்போறேன்" என்றார். இதை பெருமையாக பார்த்து கொண்டிருந்த தமிழச்சி, "கேட்டீங்களா.. சொன்னதை கேட்டீங்க இல்லை.. அதனால நிறைய பிரச்சனை இங்க இருக்கு.. எல்லாம் தீர்க்கப்பட்டுவிடும்.. தளபதிதான் அடுத்த முதல்வர்" என்றார்.