சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புயல்ல பாதிச்சவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க.. மழலை தமிழினி சொல்வதை கேளுங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    புயல்ல பாதிச்சவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க.. தமிழினி சொல்வதை கேளுங்க!

    சென்னை: புயலால் பாதித்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என 1-ஆம் வகுப்பு படிக்கும் யாழினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடும் அழிவை சந்தித்துள்ளன. வீடுகள், விவசாய பயிர்கள், கால்நடைகள் என அனைத்தும் சேதமாகின. இதனால் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு மக்கள் வேதனையில் உள்ளனர்.

    Tamizhini demands all the people to give hands to Gaja affected areas

    இவர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவிகள் அளிக்கப்பட்டாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், திரைத்துறையினர் என உதவி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு சிறுமி ஒருவர் தனது மழலை மொழியில் கஜா புயல்ல பாதித்தவர்களுக்கு உதவி புரிய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், புயல் வந்ததால எல்லார் வீட்லயும் தண்ணீர் புகுந்து ரொம்ப பாதிச்சிருச்சாம். அதனால நாங்கள் எப்படி ஹெல்ப் பண்ணுவோம்னு யோசிச்சோம்.

    அப்ப என்னோட உண்டியல்ல இருந்த பணத்தை கவுன்ட் செய்தோம். அதில் ரூ. 12 ஆயிரத்து 404 இருந்தது. இந்த பணத்துடன் என்னோட பொம்மைகளையும் சேர்த்து உங்களுக்கு கொடுக்கிறேன். இது போல் எல்லாரும் ஹெல்ப் செய்ங்க... என்று தமிழினி கோரிக்கை விடுத்துள்ளார்.

    English summary
    Tamizhini shares a video that she gives Rs. 12000 and her toys for Gaja affected areas and also she demanded all the people to provide help.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X