சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடடா.. பொங்கல் வாழ்த்திலும் கூட தாமரையை விட மாட்டேங்குறாரே இந்த தமிழிசை!

தமிழக மக்களுக்கு தமிழிசை சவுந்தராஜன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: வாழ்த்து சொன்னால் கூட தமிழிசை சவுந்தராஜன் தாமரையை விட மாட்டார் போலிருக்கு.

நாளை தமிழர் திருநாள் என்பதால் மாநிலம் முழுவதும் களை கட்டி வருகிறது. இதற்காக தலைவர்கள் மக்களுக்கு தங்கள் வாழ்த்து செய்தியை உரித்தாக்கி வருகிறார்கள்.

இதற்காக தங்கள் வீடுகளில் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் மும்முரத்திலும் தலைவர்கள் இறங்கி உள்ளனர்.

வாள்சண்டை, மான்கொம்பு

வாள்சண்டை, மான்கொம்பு

இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கட்சி அலுவலகத்தில் பாரம்பரியத்துடன் பொங்கலை நிர்வாகிகள், தொண்டர்களுடன் தமிழிசை கொண்டாடினார். இந்த விழாவில் வாள்சண்டை, மான்கொம்பு சண்டை வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

குஷியான தொண்டர்கள்

குஷியான தொண்டர்கள்

அப்போது அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இரண்டு கைகளிலும் மான் கொம்பினை பிடித்து சுழட்டி காட்டினார். தமிழிசையின் கைகளில் மான்கொம்பினை பார்த்ததும், சுற்றியிருந்த கலைஞர்கள் உட்பட பாஜக தொண்டர்கள் எல்லாருமே குஷியாகிவிட்டனர்.

வாழ்த்து அறிக்கை

வாழ்த்து அறிக்கை

இதை தொடர்ந்து தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழிசை சவுந்தராஜன் அறிக்கை மூலமாக பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். தன் வாழ்த்து அறிக்கையில் அவர் சொன்னதாவது:

தாமரை பொங்கல்

தாமரை பொங்கல்

"தாமரை பொங்கலாக தமிழ்ப் பொங்கல் மலரட்டும். தாமரை மலர்போல அனைவரின் வாழ்வும் மலர பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

சூரியனுக்கு நன்றி?

சூரியனுக்கு நன்றி?

பொங்கல் வாழ்த்தில்கூட மறக்காமல் தன் ட்ரேட் மார்க் தாமரையை பதிவிட்டதுதான் தமிழிசையின் ஸ்பெஷாலிட்டியே!! அது சரி.... "சூரியனுக்கு" நன்றி சொல்லும் விதமாகதானே பொங்கல் கொண்டாடப்படுகிறது??

English summary
BJP State President Tamizhisai Soundarajan Wishes to TN People for Lotus Pongal Festival
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X