Tamilisai Soundararajan: தமிழிசை பலே.. குலதெய்வம் குடி கொண்டுள்ள ஊருக்கே பிரதமரை வர வைத்து விட்டாரே
Recommended Video
சென்னை: கடவுள் பக்தி நிரம்பியவர்தான் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன்... ஆனால் இவ்வளவு பக்தி இருக்குமா என்று ஆச்சரியமாக உள்ளது.
பூர்வீகம் கன்னியாகுமரியாக இருந்தாலும், திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில்தான் இவரது குலதெய்வம் உள்ளது. குடும்பத்தில் எந்த நல்ல காரியமாக இருந்தாலும் இங்கு வந்து வழிபாடு செய்வதுதான் இவரது பழக்கமே.
இப்போது குடும்பத்தையும் தாண்டி, பாரத பிரதமருக்காக குலதெய்வம் கோவிலில் வழிபாடு செய்திருக்கிறார் தமிழிசை.
மைதானம் ரெடி
பெருமாநல்லூர் புதுப்பாளையம் அருகில் பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 70 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானம் ரெடி செய்யப்பட்டு மேடைகள் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.
பாஜக பட்டாளம்
இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி, அமித்ஷா என டெல்லி பாஜக பட்டாளமே வரப்போகிறது. தன் குலதெய்வம் இருக்கிறது என்பதற்காக இந்த இடத்தை தமிழிசை தேர்வு செய்தாரோ என்னவோ, பொதுக்கூட்ட வேலை எப்படி நடக்கிறது என்பதை பார்வையிட வந்தவர், முதல்வேலையாக கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டுதான் வந்தார். அதற்கு பிறகுதான், ஏற்பாடுகள் எல்லாம் எப்படி நடக்கிறது என்று கேட்டறிந்து நேரில் பார்வையிட்டார்.
|
குலதெய்வம்
இப்படி கோயிலில் வந்து சாமி கும்பிட்டதை தனது ட்விட்டர் பதிவிலும் தமிழிசை பதிவிட்டுள்ளார். அதில், "மரியாதைக்குரிய நம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் உரையாற்ற இருக்கும் பெருமாநல்லூரில்தான் எங்கள் குலதெய்வம் கோயில் உள்ளதால் தெய்வத்தை வணங்கிவிட்டு கூட்டம் நடக்க உள்ள திடல் முன் ஏற்பாடுகளை பார்வையிட்டு விட்டு சென்னை திரும்பினேன்" என்று தெரிவித்துள்ளார்.
விருப்பு-வெறுப்பு
தமிழிசை மீது பொறாமையும், போட்டியும் நிறைந்து வழிபவர்கள் தமிழக பாஜகவிலேயே சிலர் உள்ளனர். அவரது பதவி எப்படா காலியாகும் என்று எதிர்பார்த்து காத்து கிடப்பவர்களும் உண்டு. பல வெறுப்புகளை தமிழக மக்களிடையே சம்பாதித்தாலும், திரும்பவும் மோடியே பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக தமிழிசை எடுத்து வரும் முயற்சி தனிப்பட்ட முறையில் பாராட்டத்தக்கது. அது சரி... இப்படி குலதெய்வம் கோயில் வரை வந்து வேண்டிக்கிட்ட விஷயம் பிரதமர் மோடிக்கு தெரியுமா?!!