தமிழகத்தில் 11 நாட்களில் 1000 கோடி.. டாஸ்மாக் மூலம் லாபம் பார்த்த அரசு
சென்னை: தமிழகத்தில் 11 நாட்களில் ரூ 1000 கோடி வருவாய் டாஸ்மாக் மூலம் கிடைத்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக மார்ச் 24-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து ஊரடங்கில் தளர்வு அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்தபின்னர் கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
பின்னர் கடைகளை மூட உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. இதில் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கடந்த 16-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
மே 7 முதல் மே 24 ஆம் தேதி வரை ரூ 1362 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் தமிழக அரசுக்கு ரூ 1062 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இப்படி எல்லாமா நடக்கும்? குஜராத்தில் இருந்து பீகார் போக வேண்டிய ரயில் கர்நாடகாவுக்கு வந்துச்சாமே
Recommended Video
இந்த மாதம் 8ஆம் தேதி முதல் சாதாரண மதுவகைகள், குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ 10 முதல் 20 வரை விலையேற்றப்பட்டதால் ரூ 4000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என தெரிகிறது.