Tasmac Reopen : மீண்டும் மதுக்கடைகள்.. இன்று எங்கெங்கு திறப்பு.. டாஸ்மாக் முக்கிய அறிவிப்பு
சென்னை: அரசு மதுபானக்கடைகள் எங்கெங்கு திறக்கப்படும், எங்கெங்கு திறக்கப்படாது என்பது குறித்து டாஸ்மாக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மே 7ம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மே 8ம் தேதி மாலையுடன் மூடப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் ஒரு வாரத்திற்கு பிறகு நாளை முதல் திறக்கப்பட உள்ளன.
அப்படி திறக்கப்படும் கடைகள் எங்கெல்லாம் திறக்கப்படும், எங்கெல்லாம் திறக்கப்படாது என்பது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், உச்ச நீதிமன்ற ஆணையைத் தொடர்ந்து மதுபானக்கடைகள் நாளை (16.5.2020) முதல் திறக்கப்படும், பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டது. மேலும் மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் நோய் கட்டுபபாட்டுப் பகுதிகளிலும் இக்கடைகள் இயங்காது.
தமிழகத்தில் குறைந்தது பாதிப்பு.. இன்று 434 பேருக்கு கொரோனா.. சென்னையில் கணிசமாக சரிவு
மதுபானக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். கடைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.