சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க இல்லாட்டி.. 5 கொலைகளின் பின்னணியில் யார் உள்ளனர்?. எடப்பாடிக்கு தெஹல்கா பத்திரிகையாளர் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    கொடநாடு எஸ்டேட் கொள்ளை, கொலை குறித்த திடுக்கிடும் தகவல் வெளியீடு- வீடியோ

    சென்னை: கொடநாடு எஸ்டேட்டில் 5 பேர் மர்ம மரணத்தின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பதை தெரிவிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெஹல்கா பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

    கொடநாடு எஸ்டேட்டில் நடந்த 5 மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை விவகாரத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பிருப்பதாக தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் பரபரப்பு வீடியோவை வெளியிட்டார்.

    முதல்வர்

    முதல்வர்

    இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தங்களை கொள்ளையடிக்க அனுப்பியதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என மனோஜும் சயானும் வாக்குமூலம் அளித்தனர். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்தார்.

    ஜாமீன்

    ஜாமீன்

    மேலும் மேத்யூ சாமுவேலை கைது செய்ய தனிப்படை போலீஸார் டெல்லி விரைந்தனர். இதனிடையே சயோன் மற்றும் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    தயார்

    தயார்

    இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் மேத்யூ சாமுவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழக அரசு தம் மீது வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக உள்ளேன்.

    தனிப்பட்ட விரோதம்

    தனிப்பட்ட விரோதம்

    5 கொலைகள் பின்னணியில் உள்ளது யார் என்பதை எடப்பாடி தெரிவிக்க வேண்டும். நான் வெளியிட்ட செய்தி முதல்வர் பழனிச்சாமிக்கு எதிரானதுதான். ஆனால் அவர் மீது எனக்கு தனிப்பட்ட கருத்து மோதலோ விரோதமோ இல்லை. கொடநாடு கொள்ளையில் செய்தியாளராக எனது பணியை செய்துள்ளேன் என்றார் மேத்யூ.

    English summary
    Tehelka's Ex Editor Mathew Samuel says that CM has to explain the background of 5 murder which happened in Kodanad.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X