அங்கிட்டு ஆம்பன் புயல் பேயாட்டம் போட்டாலும் 12 நகரங்களில் சதமடித்து வறுவல் போட்ட வெயில்
சென்னை: வங்கக் கடலில் உருவான ஆம்பன் (அம்பன், உம்பன்) புயல் கரையை கடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்தின் சென்னை உட்பட 12 நகரங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக கொளுத்தி வறுத்தெடுத்துவிட்டது.
Recommended Video
'Heat Will Increase' - Tamilnadu Weatherman and IMD Weather Update
வங்கக் கடலில் மையம் கொண்ட சூப்பர் புயல் ஆம்பன் தமிழகத்தில் திடீரென மழையையும் கொடுத்தது; உக்கிர வெயிலுக்கும் காரணமாக இருந்தது. இந்த ஆம்பன் புயல் இன்று மேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே கரையை கடந்துவிட்டது.
இதனால் ஒடிஷா, மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் ஆம்பன் உக்கிர தாண்டவமாடியது. அதேநேர்த்தில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 12 நகரங்களில் வெயில் வெளுத்துக் கட்டி வேகவைத்துவிட்டது.
பகலில் அனல் காற்று.. சென்னையில் 108 டிகிரி பாரன்ஹீட்.. வெளுத்து வாங்கிய வெயில்!
தமிழகத்தில் 12 நகரங்களில் சதமடித்த வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்)
- சென்னை- 108 டிகிரி
- கடலூர்- 107 டிகிரி
- தருமபுரி- 101 டிகிரி
- நாகப்பட்டினம்- 104 டிகிரி
- நாமக்கல்- 100 டிகிரி
- பாளையங்கோட்டை- 100 டிகிரி
- பரங்கிப்பேட்டை - 105 டிகிரி
- புதுச்சேரி- 106 டிகிரி
- சேலம்- 102 டிகிரி
- திருத்தணி -108 டிகிரி
- தூத்துக்குடி- 100 டிகிரி
- வேலூர் -107 டிகிரி
Comments
English summary
The temperature crossed 100 Degrees Fahrenheit in 12 cities in Tamil Nadu including Chennai.
Story first published: Wednesday, May 20, 2020, 18:54 [IST]