பிள்ளையின் கல்வி கட்டணத்தை கட்ட.. ஹவுஸ் ஓனர் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி நகை திருட்டு.. பெண் கைது
சென்னை: பூந்தமல்லி அருகே மிளகாய் பொடி தூவி மூதாட்டியிடம் சங்கிலி பறித்த வழக்கில் அவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
போரூரை அடுத்த காரம்பாக்கம் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் பொம்மி அம்மாள் (75). சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்த பொம்மியம்மாள் முகத்தில் மிளகாய் பொடியை மர்ம நபர் தூவினார். பின்னர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு சென்று விட்டார்.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர்கள் 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
கஜாவைவிட 5 மடங்கு வலிமையானது.. செந்நிறத்தில் துரத்தும் புழுதி புயல்.. ஆஸ்திரேலியாவில் பீதி!
ஒப்புக் கொண்டார்
இதுதொடர்பாக மூதாட்டியின் வீட்டில் குடியிருக்கும் தனலட்சுமியிடம் (40) விசாரித்தனர். அதில் மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி நகையை பறித்ததை அவர் ஒப்புக் கொண்டார். பின்னர் அவரை கைது செய்தனர்.
தகவல்கள்
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் பொம்மியம்மாள் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில் சரியான காட்சிகள் கிடைக்கவில்லை. அதனால் சம்பவம் நடந்த நேரத்தில் அந்த வழியாக சென்ற இருவரை பிடித்து விசாரித்தோம். அப்போதும் தகவல்கள் கிடைக்கவில்லை.
மிளகாய் பொடி
இதையடுத்து பொம்மியம்மாள் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் தனலட்சுமி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை விசாரித்தோம். முதலில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டார்.
விசாரணை
கல்லூரியில் படித்து வரும் தனது பிள்ளைகளுக்கு கட்டணம் செலுத்தவே அவர் மீது மிளகாய் பொடி தூவி நகையை திருடியதாக தனலட்சுமி வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து கைதான தனலட்சுமியிடம் இருந்து நகையை மீட்ட போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.