தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்
சென்னை: தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது என்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி உடலுக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்று அஞ்சலி செலுத்தினார். இன்றுமாலை சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது என்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார்.
சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குவதாகவும் அப்போது அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
என்னதான் தலைகுப்புற விழுந்தாலும் 2021ம் ஆண்டு திமுக வால் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும், அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார்.
Comments
English summary
terrorism will not in tamilnadu, so people should not fear: says minister jayakumar
Story first published: Sunday, August 25, 2019, 21:51 [IST]