'பாசமுள்ள பாண்டியரே' உமக்கு எங்கள் புகழ் வணக்கமய்யா.. வைரமுத்து உருக்கம்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து கவிதை வெளியிட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பிரபல சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து, தா பாண்டியன் மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்து கவிதை வெளியிட்டுள்ளார். தனது ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில்.
"21 வயதிலிருந்தே கட்சிக்காரர்
கோணாத கொள்கையாளர்
ஈட்டிமுனைப் பேச்சாளர்
பெரியாரின் பெருமை பேசிய கம்யூனிஸ்ட்
ஜனசக்தியின் அடங்காத ஆசிரியர்
ஜீவாவுக்குச் சிலையெழுப்பிய சிற்பி
சிறிதும் சாயம் போகாத
சிவப்புத் துண்டுக்காரர்.
போய் விட்டீரே!
உமக்கு எங்கள் புகழ் வணக்கமய்யா
பாசமுள்ள பாண்டியரே" இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.