அடடே! காஞ்சி அத்திவரதரைப் போலவே இருக்கிறாரே தாய்லாந்து சயனநிலை புத்தர்- வைரலாகும் படம்
சென்னை: காஞ்சிபுரத்து அத்திவரதரைப் போலவே இருக்கும் தாய்லாந்து சயனநிலை புத்தர் சிலை படம் சமூக வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அத்திவரதரின் அருளாசி பெறுவதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட ஏராளமான விவிஐபிக்கள் காஞ்சி மாநகரை முற்றுகையிட்டு வருகின்றனர்.
ஒவ்வொருநாளும் காஞ்சிவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை விவரம் ஊடகங்கள் இடம்பெற்று வருகின்றன. காஞ்சி அத்திவரதரை தரிசிக்க வந்து 2 பேர் மாண்ட சம்பவமும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அத்திவரதரை தரிசிக்க செய்யப்பட்ட ஏற்பாடுகளில் குளறுபடிகள், முறைகேடுகள் என சர்ச்சைகள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன. இந்த வரிசையில் தற்போது அத்திவரதருடன் தாய்லாந்து சயனநிலை புத்தரும் மல்லுக்கட்டிக் கொண்டு வலம் வருகிறார்.
காஞ்சி அத்திவரதரைப் போலவே சயனநிலையில் இருக்கிறார் அந்த புத்தர். ஏறக்குறைய இருவரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றனர். இந்த படங்களை வைத்து பல்வேறு கருத்துகளை சமூகவலைதளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
இப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.