போலீஸ் தேடுகிறது.. புஸ்சி ஆனந்த்தான் காரணம்.. 'தளபதி விஜய் மக்கள் இயக்க' தலைவர் ராஜா பரபர வீடியோ
சென்னை: நடிகர் விஜய் ரசிகர்களாக இருந்தவர்களை ஒருங்கிணைத்து, ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் என மாற்றி, இப்போது அரசியல் கட்சியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.
Recommended Video
இந்த கட்சியில் திருச்சியை சேர்ந்த ராஜா என்பவர் முக்கிய பொறுப்பில் உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில், ராஜா இப்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், 'தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின்' மாநில தலைவராக எஸ்ஏசி என்னை நியமித்தார். அது முதல் எனக்கு, நெருக்கடி அதிகரித்துள்ளது. எனது, வீட்டுக்கு 10 போலீசார் வந்து தேடியுள்ளனர். பொய் புகார்களை போலீசார் பெற்று என்னை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். எனது குடும்பத்தினரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
கொரோனா கிடக்கட்டும்.. ஆயிரம் வாலா என்ன விலை கேளு.. தீவு திடலில் அலை மோதும் மக்கள்.. இதுதான் சென்னை!
புதுச்சேரியிலிருந்து புஸ்சி ஆனந்த் என்று இந்த அமைப்புக்கு புதிதாக, வந்து டார்ச்சர் செய்து வருகிறார். எனக்கு ஏதேனும் ஆனால் புஸ்ஸி ஆனந்த்தான் பொறுப்பு. இவ்வாறு ராஜா வீடியோ வெளியிட்டுள்ளார்.