உதயநிதி ஸ்டாலின் கூறிய அழகான வேட்பாளர் வெற்றி முகம்... அமமுகவுக்கு கடைசி இடம்
சென்னை: உதயநிதி ஸ்டாலின் கூறிய அழகான வேட்பாளர் கவிஞரும், எழுத்தாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி முகம் காட்டி வருகிறார்.
தென் சென்னை வாக்காளப் பெருமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வளவு அழகான வேட்பாளரை உங்களின் பிரதிநிதியாக அனுப்பத் தவறிவிடாதீர்கள் என்று பிரச்சாரத்தில் கூறிய உதயநிதி ஸ்டாலின்,
நான் அழகு என்றது அவருடைய தோற்றத்தை மட்டுமல்ல, அழகுத் தமிழ், தமிழ் மீது அவர் கொண்டுள்ள பற்று மற்றும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற கொள்கை ஆகியவற்றையும் சொல்கிறேன் என்றார்.
விஸ்வரூபம் எடுத்த "மய்யம்" மெளர்யாவும்..வீறு கொண்டு போராடிய காளியம்மாளும்..வட சென்னையில் அனல் போட்டி
திமுக வேட்பாளான தமிழச்சி தங்கபாண்டியன் 5,03,393 வாக்குகள் பெற்றுள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 2,73,180 வாக்குகள் வாங்கி இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ரங்கராஜன் 1,23,220 வாக்குகளை பெற்றுள்ளார்.
அடுத்தடுத்த இடங்களில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஷெரின் 43,667 வாக்குகளும், அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா 27,087 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் இந்த தேர்தல் ரிசல்ட் ரொம்ப ரொம்ப வித்தியாசமானது.. பல வகையில் ஸ்பெஷலானது.. ஏன் தெரியுமா?
சென்னை ராணி மேரி கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர் தமிழச்சி தங்கபாண்டியன், திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டது முதல் "வாரிசு அரசியல்", வேறு ஊரைச் சேர்ந்தவர் என்ற விமர்சனம் எழுந்தது. எனினும், அதனை சமாளித்து தென்சென்னை தொகுதியில் தமிழச்சி வெற்றி முகம் கண்டுள்ளார்.
செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!