அங்க போகாம நான் ஏன் இங்க வந்தேன்.. தங்கம் சொல்லும் காரணத்தைப் பாருங்க!
Recommended Video
சென்னை: அமமுகவிலிருந்து விலகி திமுவுக்கு வந்தது ஏன் என்பது குறித்து அமமுகவின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன் விளக்கமளித்துள்ளார்.
அமமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்கதமிழ்ச் செல்வனுக்கும் அதன் பொதுச் செயலாளர் தினகரனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அது மேலும் அதிகரித்தது.
இதன் விளைவு தங்கதமிழ்ச் செல்வன், தினகரனை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தினகரனும் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார். அப்போது தங்கதமிழ்ச் செல்வனை பெட்டிப் பாம்பு என கூறியிருந்தார்.
கேள்வி
இதற்கு பதிலளித்த தங்கதமிழ்ச் செல்வன், என்னாது நான் பெட்டிப் பாம்பா. அவ்வாறிருக்க எனக்கு என்ன சம்பளம் கொடுத்தா வேலைக்கு அமர்த்தியுள்ளார் என கேள்வி எழுப்பியிருந்தார்.
ஸ்டாலின்
இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்திருந்தனர். இதையடுத்து வழக்கம் போல் எந்த கட்சிக்கும் செல்லமாட்டேன் என கூறிய தங்கம், அடுத்த நாளே ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
பாஜக
இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில் வருமானத்தை எதிர்பார்க்கும் தங்கதமிழ்ச் செல்வன் தன்மானத்தை பற்றி எல்லாம் பேசக் கூடாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
அதிமுகவில் இணையவில்லை
இந்த நிலையில் தான் திமுகவுக்கு சென்றது குறித்து தங்கத் தமிழ்ச் செல்வன் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில் இரட்டை தலைமை காரணமாகவே அதிமுகவில் இணையவில்லை.
பதவி
மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக அமமுகவில் இருந்து விலகி திமுகவிற்கு வந்துள்ளேன். திமுகவிற்கு சாதாரண தொண்டனாக வந்துள்ளேன். பதவியை எதிர்பார்த்து வரவில்லை என்றார் தங்கதமிழ்ச் செல்வன்.