தந்தை பெரியார் 46-வது நினைவு நாள் - ஸ்டாலின் மலர்தூவி மரியாதை- எச். ராஜா கடும் விமர்சனம்!
Recommended Video
சென்னை: தந்தை பெரியாரின் 46-வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இன்று தந்தை பெரியாரின் 46-வது நினைவுநாள். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், கட்சிகளை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தினர்.
சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக பொருளாளர் துரைமுருகன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
ஈரோட்டுப் பூகம்பம் என முத்தமிழறிஞரால் போற்றிய அறிவாசான் தனது அறிவுப்பயணத்தை நிறுத்தி அரைநூற்றாண்டு ஆனது.
— M.K.Stalin (@mkstalin) December 24, 2019
ஆனாலும் அது வெடித்துக்கொண்டே தான் இருக்கிறது. தமிழினம் உணர்வு பெற அந்த வெப்பம் மேலும் பல நூற்றாண்டுகளுக்குத் தேவை!
அவரது பாடங்கள் கைகாட்ட நமது பயணம் தொடரும்! வாழ்க #periyar! pic.twitter.com/Mdq3HIJoKB
இதனிடையே பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் தந்தை பெரியாரை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். அவர் தமது பதிவில், ஈவேரா பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவு தந்தார். அதேபோல லண்டனில் இருந்து கொண்டாவது சென்னை ராஜதானியை ஆளவேண்டும் என்று தீர்மானம் போட்டார்.
ஈவேரா பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவு தந்தார். அதேபோல லண்டனில் இருந்து கொண்டாவது சென்னை ராஜதானியை ஆளவேண்டும் என்று தீர்மானம் போட்டார்.
— H Raja (@HRajaBJP) December 24, 2019
ஆகவே
இந்த நாட்டில் அமைதிக்கு விரோதமாக இருப்பது
"டெரரிஸ்ட்களும்
பெரியாரிஸ்ட்களும்"
ஆகவே இந்த நாட்டில் அமைதிக்கு விரோதமாக இருப்பது "டெரரிஸ்ட்களும் பெரியாரிஸ்ட்களும் என விமர்சித்துள்ளார். இதற்கு பெரியார் ஆதரவாளர்கள் பதிலளித்து வருகின்றனர்.