சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3வது அம்பயர் தூக்கு போட்டு செத்துரணும்.. அப்படி திட்டினதுக்கு ஸாரி.. வருத்தப்பட்ட குட்டிப் பையன்!

3-வது அம்பயரை திட்டிய சிறுவன், மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளான்

Google Oneindia Tamil News

Recommended Video

    3-வது அம்பயரை திட்டிய குட்டிப்பையன் சாரி கேட்டு வெளியிட வீடியோ

    சென்னை: "3-வது அம்பயரை நான்தான் திட்டினேன். அதுக்கு ரொம்ப ஸாரி. சிஎஸ்கே மேல ஒரு பாசத்துல, உணர்ச்சிவசப்பட்டு திட்டிட்டேன்" என்று சம்பந்தப்பட்ட சிறுவன் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளான்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. கடைசி பந்து வரை படு விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் மும்பை ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சென்னை தோற்றது. இது சென்னை ரசிகர்களை பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எப்படியாவது ஜெயித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை அணி தோற்றதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.

    செத்துருப்பான்

    செத்துருப்பான்

    இதில் ஒரு சிறுவன் அழுதே விட்டான். இது சம்பந்தமாக ஒரு வீடியோவும் வெளியானது. அதில், "தோனி அவுட்டே இல்லை.. சனியன் பிடிச்சவன்.. 3வது அம்பயர் தூக்குப் போட்டு செத்துருப்பான்" என்றும் கோபமாக நடுவரை சபித்தான்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இந்த வீடியோ வைரலானது. என்னதான் விளையாட்டு என்றாலும், தோனியின் தீவிர விசிறி என்றாலும், பெரியவர்களை இப்படி சிறுவன் பேசியது தவறுதான். அது மட்டுமில்லை, பிள்ளைகளை கிரிக்கெட் எந்த அளவுக்கு மாற்றி வைத்துள்ளது என்பதும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

    மன்னிப்பு வீடியோ

    மன்னிப்பு வீடியோ

    இந்தநிலையில், 3வது அம்பயர் தூக்குப் போட்டு செத்துருப்பான் என்று சாபம் விட்டு அழுத சிறுவன் இப்போது மன்னிப்பு கேட்டுள்ளான். அவன் பெயர் கிரித்திகேஷ். அண்ணாநகரில் ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். மன்னிப்பையும் வீடியோ மூலமாகவே அந்த சிறுவன் கேட்டுள்ளான். அப்போது சிஎஸ்கே யூனிபார்ம் கொண்ட டி-ஷர்ட்டைதான் போட்டிருக்கிறான்.

    எல்லாருக்கும் ஸாரி

    எல்லாருக்கும் ஸாரி

    அந்த வீடியோவில் "3-வது அம்பயரை நான் திட்டினேன். அதுக்கு ரொம்ப ஸாரி. சிஎஸ்கே மேல ஒரு பாசத்துல, உணர்ச்சிவசப்பட்டு திட்டிட்டேன். எல்லாருக்கும் ஸாரி" என்கிறான்.

    ஓடி போவேன்

    ஓடி போவேன்

    தோனி இப்போ உங்கவீட்டுக்கு வந்தா என்ன செய்வீங்க?ன்னு என்று ஒரு குரல் கேட்கிறது. அதற்கு சிறுவன், "வீட்டுக்கு தோனி வந்தா, நான் காலை தொட்டு கும்பிடுவேன், தோனியை பார்த்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கும். அங்கிருந்து என்னை தோனி கூப்பிட்டால், இங்க இருந்து அவர் வீட்டுக்கே ஓடிப்போய்டுவேன்" என்று சிரித்தவாறே சொல்கிறான்.

    English summary
    Chennai Boy say sorry and released video for scolding 3rd umpire in IPL Final Match 2019
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X