அடுத்த 5 நாளுக்கு... தென் மாவட்டங்களில் லேசான மழை இருக்காம்... வானிலை மையத்தின் நியூ நியூஸ்!
சென்னை: அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்மையில் முடிவடைந்த வடகிழக்கு பருவமழையால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நல்ல மழை கொட்டியது குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. வழக்கமாக டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் வடகிழக்கு பருவமழை, இந்த மாதத்தின் நடுப்பகுதி வரை நீடித்தது. வடகிழக்கு பருவமழையால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை கொட்டியது. பருவமழை காரணமாகவும், நிவர் உள்ளிட்ட புயல் காரணமாகவும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக தென்மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. வருண பகவான் கருணையால் தமிழகத்தில் முக்கியமான அணைகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியதாவது:-கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துட்டனும் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.