ஸ்வீட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 83 நாட்களுக்கு பிறகு.. கொரோனா பாசிட்டிவ் விகிதம் 3.6% ஆக குறைந்தது!
சென்னை: தமிழ்நாட்டில் 83 நாட்களுக்கு பிறகு கொரோனா பாசிட்டிவ் விகிதம் 3.6% ஆக குறைந்துள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.4% ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு வழியாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாகவே கொரோனா வைரஸ் குறைந்துள்ளது. ஒரு கட்டத்தில் 36,000-க்கு மேல் தினசரி பாதிப்பு சென்ற நிலையில் தற்போது 7,000-க்குள் குறைந்து விட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
கொரோனா தடுப்பூசி 'சாதனை' சட்டென மறுநாளே சரிந்தது ஏன்? பாஜக ஆளும் 7 மாநிலங்களின் மீது சந்தேகம்?
அதாவது சுமார் 83 நாட்களுக்கு பிறகு கொரோனா பாசிட்டிவ் விகிதம் 3% நோக்கி செல்கிறது. இன்று கொரோனா பாசிட்டிவ் விகிதம் 3.6% ஆக இருக்கிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 50,000-க்கு கீழ் குறைந்து 49,845 உள்ளது.
தலைநகர் சென்னையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.4% ஆக உள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் கொரோனா வைரஸ் தரவு ஆய்வாளர் விஜய் ஆனந்த். சென்னையில் 26,529 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 3530 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இன்று கோவையில் அதிகபட்சமாக 756 பேருக்கும், ஈரோட்டில் 641 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.