சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏற்கனவே 3.. இதுல 4வதுக்கு முயற்சித்த அஜீத் குமார்.. லபக்கென்று கொத்திக் கொண்டு போன போலீஸ்!

3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்

Google Oneindia Tamil News

சென்னை: ஏற்கனவே 3.. இதில 4-வது பொண்டாட்டிக்கு ட்ரை பண்ணின அஜித்குமாரை போலீசார் லபக்கென்று தூக்கி சென்றுவிட்டனர்.

கேரளாவை சேர்ந்தவர் அஜித்குமார். வயசு 46. சென்னை சாலிகிராமத்தில் நிகழ்ச்சிகள் மேலாண்மை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

The fraudulent king arrested for cheating women by marriage in Chennai

இவருக்கு கல்யாணமாகி தேவிகா என்ற மனைவியும் 6 வயசில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் தேவிகா, வளசரவாக்கம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், தன் கணவன் ஜோதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும், அந்த பெண்ணே தன்னிடம் இதை பற்றி சொல்லியதாகவும் புகாரில் கூறியிருந்தார். விஷயம் தெரிந்ததால், தன்னை கணவர் அடித்து துன்புறுத்துகிறார் என்றும் தேவிகா தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அஜித்குமாரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போதுதான், அஜித்குமாருக்கு ஏற்கனவே 2 கல்யாணம் நடந்துள்ளது தெரியவந்தது. அதாவது 1998-ம் ஆண்டில் கேரளாவில் ஜோதி என்பவரையும், 2001-ம் ஆண்டில் டெலிலா என்பவரையும் கல்யாணம் செய்திருக்கிறார். 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.

3-வதுதான் தேவிகா என்பவர். மேலும் இந்த 3 பேரையும் தவிர்த்து 4-வதாக இன்னொரு கல்யாணமும் செய்யும் முயற்சியிலும் உள்ளாராம். எல்லாவற்றையும் போலீசாரிடம் அஜித்குமார் சொல்லியதையடுத்து, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள்.

English summary
Cheating Married Man Ajithkumar arrested by Saligram Police in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X