என் செல்லமே.. திரும்பவும் என்கிட்ட வந்துட்டியாடா.. பப்லுவை கட்டி அணைத்து கதறிய பெண்!
காணாமல் போய் திரும்பி வந்த நாய்க்கு பெண் ஒருவர் கட்டியணைத்து முத்தமிடுகிறார்.
Recommended Video
சென்னை: என் செல்லமே... வந்துட்டியா... திரும்பவும் என்கிட்ட வந்துட்டியாடா.. என்று பப்லுவை கட்டியணைத்து கொஞ்சுகிறார் ஒரு பெண். முத்தமாக கொடுத்து மகிழ்கிறார்.. இந்த கொஞ்சலும் முத்தமும் யாருக்கு தெரியுமா? பப்லு என்ற நாய்க்குத்தான்!
இந்த பெண்மணி யார், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் ஆசை ஆசையாக வளர்த்த பப்லுவை திடீரென காணாமல் தவித்து போய்விட்டார் அந்த பெண். தன்னையே சுற்றி சுற்றி வந்த பப்லு எங்கே போனதோ, யாரிடம் சிக்கி இருக்கிறதோ, என்ன ஆனதோ என தெரியாமல் கண்கலங்கியே இருந்துவந்துள்ளார்.
"பப்லுவை யாராவது பார்த்தீங்கன்னா என்கிட்டயே கொண்டு வந்து கொடுத்திடுங்கன்னு" சமூகவலைதளங்களில் தகவலும் அளித்தார். கூடவே பப்லுவின் கெத் லுக்குடன் கூடிய போட்டோவையும் பதிவிட்டார். ஆனால் எந்த பதிலுமே இல்லை.. பப்லுவும் கிடைக்கவே இல்லை. தற்போது 57 நாட்கள் கழித்து பப்லு கிடைத்துவிட்டாள்.
அதனை கண்டுபிடித்து உரிமையாளரான அந்த பெண்ணிடம் கொண்டு வந்து ஒப்படைத்தார்கள். காணாமல் போன பப்லுவை பார்த்தவுடன் அந்த பெண்ணின் சந்தோஷம், ஆனந்தம், கண்ணீர் என மாறி மாறி வருகிறது. பப்லுவை கட்டியணைத்து முத்தமழை பொழிகிறார். "என் செல்லமே... வந்துட்டியா... திரும்பவும் என்கிட்ட வந்துட்டியாடா.." என்று சொல்லும்போது கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றுகிறது
திரைக்கதையில் டிவிஸ்ட் வைத்த பாக்யராஜ்.. சங்க தேர்தலை சந்திக்க முடிவு.. அதிரடி திட்டம்
பதிலுக்கு பப்லுவும் அந்த பெண்ணுக்கு முத்தமிடுகிறது. இந்த இரு உள்ளமும் இணையும் நெகிழ்ச்சி காட்சியை பேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டுள்ளார். பப்லுவை தன்னிடமே ஒப்படைத்துவிட்ட நபர்களுக்கு அந்த பெண் நன்றி கூறியுள்ளார்.