சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலா பற்றியெல்லாம் கவலையில்லை... நாங்கள் எம்ஜிஆர் வழி நடப்பவர்கள் - அமைச்சர் ஜெயக்குமார்

கட்சியும் ஆட்சியும் சசிகலா மற்றும் அவரது குடும்ப தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: நாங்கள் எம்.ஜி.ஆர் வழி நடப்பவர்கள். சசிகலா வந்தாலும் வராவிட்டாலும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. கட்சியும் ஆட்சியும் சசிகலா மற்றும் அவரது குடும்ப தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சசிகலா விடுதலை பற்றிய செய்தி கடந்த இரண்டு நாட்களாக பேசு பொருளாகியுள்ளது. சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன்தான் இந்த விவாதத்தை தொடங்கி வைத்தனர். சசிகலாவின் வீட்டில் வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டியதை அடுத்து சசிகலா விரைவில் விடுதலையாவார் என்று போகிற போக்கில் சொல்லி விட்டு போக அதைப்பற்றி பலரும் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

The party and the government should be without the family intervention of Sasikala - Jayakumar

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் சசிகலாவின் விடுதலை பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் சொன்ன அமைச்சர் ஜெயக்குமார் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "கப்பலோட்டிய தமிழன், கப்பலோட்டிய இந்தியன் என்ற அளவில் தமிழனுக்கும் இந்தியனுக்கும் பெருமை சேர்த்தவர் வ.உ.சி என்று புகழாரம் சூட்டினார். டிஎன்பிஎஸ்சி குரூப்-4 கலந்தாய்வுக்கான கவுன்சிலிங் விரைவில் நடக்கும் என்று கூறினார்.

Recommended Video

    திடீர்னு பாடுவார்.. இல்லாட்டி கவிதை படிப்பார்.. இப்ப டக்குனு கடலுக்குள்ளயே போயிட்டாரே.. ஜெயக்குமார்

    நாங்கள் எம்.ஜி.ஆர் வழி நடப்பவர்கள். சசிகலா வந்தாலும் வராவிட்டாலும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. கட்சியும் ஆட்சியும் சசிகலா மற்றும் அவரது குடும்ப தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று தெரிவித்தார்.

    English summary
    We have no worries whether Sasikala will come or not. We are following on the MGR way, Minister Jayakumar has said that it is our wish that the party and the regime should be free from the interference of Sasikala and his family.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X