பொன்னமராவதி விவகாரம்.. பெண்களை இழிவாக பேசிய தீய சக்திகள்... ட்விட்டரில் பொங்கிய ஹெச். ராஜா
சென்னை: ஒரு பிரிவு சமுதாய மக்களை குறிப்பாக அச்சமுதாய பெண்களை இழிவாக பேசிய சமூகவிரோத தீய சக்திகளை காவல்துறை, உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா வலியுறுத்தி உள்ளார்.
ஒரு சமூகத்தினர் பற்றிய அவதூறு வாட்ஸ்அப் ஆடியோவால் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கலவரம் ஏற்பட்டது. போராட்டத்தின்போது பொன்னமராவதி காவல்நிலையம், போலீஸ் வாகனங்களும் தாக்கப்பட்டன. இது தொடர்பாக, 1,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 50 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று ஒருநாள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொன்னமராவதி மோதலை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முத்தரையர் சமுதாய மக்களை குறிப்பாக அச்சமுதாய பெண்களை இழிவாக பேசிய சமுகவிரோத தீய சக்திகளை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுடன் நாம் உணர்வுப் பூர்வமாக இணைந்திருப்போம்.சட்டரீதியில் போராடும் அதே நேரத்தில் அனைவரும் அமைதி காக்க வேண்டுகிறேன். https://t.co/vBvUpBEshV
— Chowkidar H Raja (@HRajaBJP) 20 April 2019
பொன்னமராவதி பதற்றத்தை தணிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கலவரம் பரவாமல் தடுக்க, 1, 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆஹாடா.. அச்சாடா.. ஒரே ஒரு வேட்பாளர்.. ஓகோன்னு 240 வழக்கு !
கலவரம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஹெச். ராஜா, ஒரு பிரிவு சமுதாய மக்களை குறிப்பாக அச்சமுதாய பெண்களை இழிவாக பேசிய சமுகவிரோத தீய சக்திகளை காவல்துறை, உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுடன் நாம் உணர்வுப் பூர்வமாக இணைந்திருப்போம். சட்டரீதியில் போராடும் அதே நேரத்தில் அனைவரும் அமைதி காக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.