3 பெயர் ரெடி.. பொங்கலுக்கு லான்ச் செய்ய திட்டம்.. ரஜினி சேனல் தொடங்க காரணம் என்ன தெரியுமா?
பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து நடிகர் ரஜினிகாந்த் தொலைக்காட்சி சேனல் தொடங்கும் முடிவை எடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.
சென்னை: பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து நடிகர் ரஜினிகாந்த் தொலைக்காட்சி சேனல் தொடங்கும் முடிவை எடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.
நேற்று ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அதில் எனது பெயரில் புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்க உள்ளோம். அதற்காக பதிவு செய்து இருக்கிறோம் , என்று கூறினார்.
இதனால் அவர் சேனல் தொடங்குவது உறுதியாகி உள்ளது. தற்போது இந்த சேனல் குறித்து சில அப்டேட்கள் வெளியாகி உள்ளது.
எப்போது வருகிறது
இந்த சேனலை நடிகர் ரஜினிகாந்த் வரும் பொங்கல் அன்று திறக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது. பொங்கல் அன்று பேட்ட படம் ரிலீஸ் ஆகிறது. அதே தினம் இந்த சேனலும் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
என்ன பெயர்கள்
ஏற்கனவே இதற்காக மூன்று பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற பெயர்களை பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் தலைவர் டிவி என்ற பெயர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
யார் தலைமை
அதேபோல் இது பெரும்பாலும் செய்தி சேனலாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர். பிரபல செய்தியாளர் ஒருவர் இதில் தலைமை செய்தியாசிரியராக சேர போகிறார் என்றும் தகவல்கள் வருகிறது. இதுகுறித்து விரைவில்அறிவிப்புகள் வெளியாகலாம்.
காரணம் என்ன
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த வருடம் அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் உள்ளார். அதனால், தனது அரசியல் பயணத்துக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று சேனல் தொடங்க திட்டமிட்டுள்ளார். தன்னுடைய பிரச்சாரங்கள், கொள்கைகளை பரப்ப முடிவெடுத்து இந்த சேனலை தொடங்க உள்ளார் என்கிறார்கள்.
சில கசப்புகள்
ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த சில பேட்டிகள் பெரிய விமர்சனங்களை சந்தித்தது. ஊடகங்களில் இவர் மீது பெரிய விமர்சனங்கள் எழுந்தது. இதனால் தனக்கு என்று தனி சேனல் இருக்க வேண்டும் என்று விரும்பி இவர் சேனல் தொடங்க போவதாகவும் கூறப்படுகிறது.