இலங்கை குண்டு வெடிப்பு அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை… நடிகை ராதிகா வேதனை
Recommended Video
சென்னை: ஈஸ்டர் தினத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையில், அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொச்சிக்கடை தேவாலயம் உட்பட 6 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், நடிகை ராதிகா கூறுகையில், 2 நாட்களுக்கு முன்பு நான் சின்னமான் ஹோட்டலில் தங்கியிருந்தேன் என்றும், சகோதர், அவரது குடும்பம், உறவினர்கள் அனைவரும் தங்கியுள்ளனர் .
10 ஆண்டு அமைதிக்கு பின் குண்டுவெடிப்பு.. இலங்கையில் இறுதி போருக்கு பின் மிகப்பெரிய தாக்குதல்!
எனது உறவினர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்பது மகிழ்ச்சி தருகிறது என்றாலும், இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், சின்ன வயது முதலே அந்த சர்ச்சுக்கு நான் போயுள்ளேன் என்று கூறியுள்ள ராதிகா, புனித ஆண்டனி சர்ச் கொழும்பிலேயே மிகவும் பிரபலமானது. எப்போதும் கூட்டமாக இருக்கக் கூடிய சர்ச் அது என்றார்.
OMG bomb blasts in Sri Lanka, god be with all. I just left Colombo Cinnamongrand hotel and it has been bombed, can’t believe this shocking.
— Radikaa Sarathkumar (@realradikaa) April 21, 2019
அங்கு குண்டுவெடிப்பு நடந்திருப்பது கேட்கவே கஷ்டமாக உள்ளது என்றும், போன் செய்து அங்கு கேட்டபோது 2 குண்டு வெடிப்பு நடந்ததாக கூறினர் . சின்னமான் ஹோட்டல், சாங்கிரிலால் ஹோட்டலில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது எனவும் ராதிகா கூறினார். இதற்கிடையே, இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து, ராணுவத்தினர் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புகளை அடுத்து நிலைமையை பற்றி இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.