கம்பியை இப்படி கழற்றி... பாடியை என்ன பண்ணனும் தெரியுமா.. டெமோ காட்டிய திருடன்.. ஷாக்கான போலீஸ்!
கேரள போலீஸாரின் விழிப்புணர்வு வீடியோ வைரலாகிறது
சென்னை: போலீஸை வைத்துக் கொண்டே, வீட்டிற்குள்ளேயே முகமூடி அணிந்து ஒருவர் திருட வருகிறார்.. இந்த வீடியோவை பார்த்த பலருக்கும் தூக்கி வாரிப்போட்டு வருகிறது.
Recommended Video
முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு ஒரு திருடன், ஒரு வீட்டின் ஜன்னலோரம் வந்து நிற்கிறார். அவர் கையில் ஒரு பெரிய கட்டை இருக்கிறது.. அந்த ஜன்னலில் 10 இரும்பு கம்பிகள் உள்ளன..
கையில் உள்ள பெரிய கட்டையை வைத்து அந்த இரும்பு கம்பியை சத்தமில்லாமல் நிமிர்த்துகிறார்.. கம்பி வளைய ஆரம்பிக்கிறது.. இப்போது ஜன்னல் வழியாக ஆள் உள்ளே நுழையும் அளவுக்கு இடமும் கிடைத்து விடுகிறது..
அந்த ஜன்னலுக்குள் நபர் உடலை வளைத்து ஈஸியாக நுழைந்து விடுகிறார்... இப்படி ஒரு வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.. ஆனால், முகமூடி அணிந்து வீட்டிற்குள் எகிறி குதித்தபோது திருடனுடன் போலீசாரும் இருக்கிறார்கள்.
ஆம்.. வீட்டிற்குள் திருடர்கள் எப்படி கம்பிகளை வளைத்து திருடுகிறார்கள் என்று கேரளா போலீசார் ஒரு டெமோ காட்டி உள்ளனர்.. இதில் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால், கம்பியை வளைத்து கொண்டு உள்ளே வந்த திருடனை வைத்தேதான் இந்த டெமோ காட்டப்பட்டுள்ளது.. இந்த புதுவித விழிப்புணர்வு வீடியோவை பலரும் வரவேற்று அந்த போலீஸ் குழுவினருக்கு சபாஷ் போட்டு வருகின்றனர்.