"பாசிட்டிவ்".. ஷாக் ஆன ஓ.ராஜா.. வீட்டிலிருந்து வெளியிலேயே செல்லாத நிலையில் தொற்று வந்தது எப்படி?
ஓ.ராஜாவுக்கு மதுரையில் தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது
சென்னை: தனக்கு கொரோனா "பாசிட்டிவ்" என்று ரிசல்ட் வந்ததுமே ஓ.ராஜா ஷாக் ஆகிவிட்டாராம்.. 4 நாளைக்கு முன்பே பெரியகுளம் வீட்டை ஓபிஎஸ் காலி செய்து விட்ட நிலையில், ஓ.ராஜா மட்டும் தொற்றில் சிக்கி கொண்டது பெரும் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது.
எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என ஒவ்வொருவராக தொற்று பாதித்து வருகிறது.. அவர்களுடன் சேர்த்து அவர்களின் குடும்பத்தாரையும் பாதித்து வருகிறது.. அந்த வகையில், துணை முதல்வர் தம்பி ஓ.ராஜாவும், தொற்று உறுதியான நிலையில், மதுரை அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
10 நாளைக்கு முன்புதான் துணை முதல்வர் பெரியகுளம் வந்திருந்தார்.. அப்போதே அங்கு தொற்று அதிகமாக பரவி வந்த காரணத்தால்தான் 21-ம் தேதியே பெரியகுளம் நகராட்சி பகுதிக்கு மட்டும், முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.
எல்லையில் பதற்றம்.. 12 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் சமரச பேச்சுவார்த்தை.. சுமூகம் எட்டவில்லை?
பெரியகுளம்
அதனால், சென்னையில் இருந்து தேனி வந்த ஓபிஎஸ், பெரியகுளத்தில் தங்காமல், 3 நாட்கள் தன்னுடைய தொகுதியான போடியில் ஒரு வாடகை வீட்டை எடுத்து தங்கினார் என்று சொல்லப்பட்டது.. அந்த அளவுக்கு அங்கு தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஓபிஎஸ்-ன் பழைய வீடு பக்கத்திலேயே ஓ.ராஜா வீடும் இருக்கிறது..
ஓ.ராஜா
இந்த சமயத்தில்தான் மொத்த பெரியகுளம் பகுதியையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.. ஒரு வீடு விடாமல் சோதனையை செய்ய ஆரம்பித்தனர். அப்போது, ஓ.ராஜாவுக்கும் 4 முறை டெஸ்ட் செய்யப்பட்டது.. ஆனால் நெகட்டிவ் என்றே ரிசல்ட் வந்துள்ளது.. இருந்தாலும் பெரியகுளத்தில் வைரஸ் பரவல் அதிகம் என்பதால், போடி அருகே இருக்கும் போடேந்திரபுரத்திற்கு தன் மாமனார் வீட்டுக்கு கடந்த வாரமே சென்றுவிட்டார்.
அதிர்ச்சி
இந்த நிலையில், அப்பகுதியில் வீடு வீடாக சென்று டெஸ்ட் செய்து வந்த அதிகாரிகள், ஓ. ராஜா வீட்டுக்கும் சென்று டெஸ்ட் செய்தனர்.. அப்போதுதான் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்திருக்கிறது.. இதை கேட்டு ஓ.ராஜா கடுமையான அதிர்ச்சி அடைந்துவிட்டாராம். உடனடியாக மதுரை அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டனர்.. தற்போது சிகிச்சையும் நடந்து வருகிறது.
உறுதி
இதில் வேதனை என்னவென்றால், அதே ஆஸ்பத்திரியில் ஓ. ராஜாவின் மனைவியும் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்... மேலும் 2 உறவினர்களுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.. அவர்களும் மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது யாரெல்லாம் ஓ.ராஜாவுடன் தொடர்பில் இருந்தார்கள் என்று ஆராயப்பட்டு, அவர்களை அதிகாரிகள் கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகிறார்கள்.
எப்படி பரவியது?
மேலும் ஓ.ராஜா தங்கியிருந்த போடேந்திரம்புரம் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.. ஆனால் கொரோனா ஆரம்பித்ததில் இருந்தே ஓபிஎஸ், ஓ ராஜா குடும்பத்தினர் வெளியே எங்குமே சென்று வராத நிலையில், எப்படி தொற்று பரவியது என்பதுதான் புரியவில்லை என்கிறார்கள்.