சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீ சாகவேண்டாம்.. நானே சாகடிக்கிறேன்... திருமணமான 6 மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்

Google Oneindia Tamil News

Recommended Video

    திருமணமான 6 மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்- வீடியோ

    சென்னை தாம்பரத்தில் திருமணமான 6 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், கணவனே அந்த பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம் ஆடியது அம்பலமாகி உள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சுந்தரபாண்டிய புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் மாரியப்பன் தனது சொந்த ஊரான தென்காசியைச் சேர்ந்த விக்னேஷ்வரியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

    சகோதரி வீட்டில் குடியேற்றம்

    சகோதரி வீட்டில் குடியேற்றம்

    இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் காந்தி நகரில் தனது சகோதரியின் அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியுடன் மாரியப்பன் குடியேறினார்.

    அ.... அய்யா..... அது.... வந்து வந்து.. பைவ் ஸ்டார் துரோகம் (45)அ.... அய்யா..... அது.... வந்து வந்து.. பைவ் ஸ்டார் துரோகம் (45)

    வரதட்சனை

    வரதட்சனை

    இதற்கிடையில் திருமணம் ஆன சில நாட்களில் இருந்தே மனைவி விக்னேஷ்வரியிடம் உறவினர்கள் யாருடனும் பேசக்கூடாது என கண்டித்தாராம். இதேபோல் அடிக்கடி பணம், நகை கொண்டுவா என வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினாராம்.

    தற்கொலை

    தற்கொலை

    இந்நிலையில் மனஉளைச்சலில் இருந்த விக்னேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு உடலை அனுப்பி வைத்த போலீசார் மாரியப்பனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முண்ணுக்கு பின் முரணாக பேசியதால், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    கழுத்து நெறித்து கொலை

    கழுத்து நெறித்து கொலை

    சம்பவம் நடந்த செவ்வாய்கிழமை இரவு மனைவி விக்னேஷ்வரி மற்றும் கணவன் மாரியப்பன் இடையே வரதட்சணை விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த மாரியப்பன், மனைவி விக்னேஷ்வரியை கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் இரவு பணிக்கு சென்றுவிட்ட மாரியப்பன் மறுநாள் புதன்கிழமை காலை, தனது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறியது தெரியவந்துள்ளது.

    சிறையில் அடைப்பு

    சிறையில் அடைப்பு

    மேலும் செவ்வாய்கிழமை இரவு நடந்த தகராறில் மனைவி சாகப்போவதாக கூறியதை கேட்டு, நானே உன்னை சாகடித்துவிடுகிறேன் என்று கூறி மனைவியை மாரியப்பன் கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த சேலையூர் போலீசார், மாரியப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    English summary
    Thenkasi newly married women strangled and killed by husband in chennai, Selayur police arrested her husband
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X