ஆமாம் ஐயா உண்மையை பேச தைரியம் வேணும் இல்லையா.. ராமதாஸுடன் தொடர்ந்து மல்லுக்கட்டும் திமுக எம்பி !
Recommended Video
சென்னை: பாமக ராமதாஸ் டுவிட்டரில் போடும் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் டுவிட்டரில் மல்லுக்கட்டி வருகிறார்.
மக்களவைத் தேர்தலில் திமுக அளித்த வாக்குமூலத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில் மக்களவைத் தேர்தலுக்கு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வோம்: மு.க.ஸ்டாலின் - மீண்டும் பொய், மீண்டும் பித்தலாட்டம், மீண்டும் ஏமாற்று வேலை. பழக்கதோஷம் மாறாதல்லவா! என திமுக பொய் கூறுவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
#மீண்டும்_பொய்,- நான் அல்லது என் குடும்பத்தினர் தேர்தலில் போட்டி இட மாட்டோம்#மீண்டும்_பித்தலாட்டம்- இனி திமுக/ஆதிமுக கூட்டணி கிடையாது#மீண்டும்_ஏமாற்று_வேலை- 200 சிங்க குட்டிகள் பூத்துக்கு வெளிய நின்று முறைப்பர்கள்
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) September 29, 2019
பழக்கதோஷம்.
ஆமாம் ஐயா உண்மைய பேச தைரியம் வேணும் இல்லையா.😊
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தருமபுரி திமுக எம்பி செந்தில் குமார் மல்லுக்கட்டி வருகிறார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்
#மீண்டும்_பொய்,- நான் அல்லது என் குடும்பத்தினர் தேர்தலில் போட்டி இட மாட்டோம்
#மீண்டும்_பித்தலாட்டம்- இனி திமுக/ஆதிமுக கூட்டணி கிடையாது
#மீண்டும்_ஏமாற்று_வேலை- 200 சிங்க குட்டிகள் பூத்துக்கு வெளிய நின்று முறைப்பார்கள்
பழக்கதோஷம்.
ஆமாம் ஐயா உண்மைய பேச தைரியம் வேணும் இல்லையா என கிண்டல் செய்துள்ளார். இதுபோல்தான் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற 4 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு: செய்தி - இந்த 4 பேர் சிக்கிக் கொண்டனர். மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சியிலிருந்து கொண்டு இன்னொரு கட்சியில் இருப்பதாக ஆள்மாறாட்டம் செய்து வெற்றி பெற்ற அந்த 4 பேர் எப்போது சிக்கப் போகிறார்களோ? என கேள்வி எழுப்பியிருந்தார் ராமதாஸ்.
பொய்.. பித்தலாட்டம்.. ஏமாற்று வேலை.. பழக்க தோஷம் மாறாதல்லவா.. ஸ்டாலின் மீது ராமதாஸ் தாக்கு!
இதற்கு பதில் அளித்த செந்தில் குமார் எம்பி, ஐயா அருமை ஐயா., ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத ஒரு கட்சி ., இங்கே தமிழ் நாட்டில் இருந்து ஒரு ராஜ்ய சபா MP., டெல்லிக்கு அனுப்பியதாக தகவல்., கொஞ்சம் அதுவும் விசாரித்து மக்களுக்கு சொன்னால் நன்றாக இருக்கும் ஐயா என தெரிவித்துள்ளார்.